அமெரிக்க அதிபர் தேர்தல் – நான் அதிபரானால் இந்தியாவுடன் துணை நிற்பேன் : ஜோ பிடன் ..!

இந்தியாஉலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் – நான் அதிபரானால் இந்தியாவுடன் துணை நிற்பேன் : ஜோ பிடன் ..!

அமெரிக்க அதிபர் தேர்தல் – நான் அதிபரானால் இந்தியாவுடன் துணை நிற்பேன் : ஜோ பிடன் ..!

அமெரிக்க அதிபர் தேர்தல் நவ., 3ம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி அதிபர் டிரம்ப் 2வது முறையாகப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். துணை அதிபராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

இந்தியாவின் 74வது சுதந்திரதினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவுடன் சிவில் அணு ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு முன்னணியில் இருந்து நான்தான் பணியாற்றினேன். ‘இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய நட்புநாடுகளாக மாறினால், கூட்டாளிகளாக இருந்தால், இந்த உலகம் பாதுகாப்பானதாக மாறும்’ என, அப்போது நான் கூறினேன்.நான் தற்போது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால், இந்த வார்த்தைகளைக் காப்பேன். இந்தியா தற்போது சந்தித்துவரும் உள்நாட்டு பிரச்சினைகளிலும், எல்லைப் பிரச்சினைகளிலும் அச்சுறுத்தல்களிலும் அந்நாட்டுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும், பெரிய சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றம், உலகல சுகாதார பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்போம்.

துணை அதிபர் பதவிக்கு என்னுடைய தோழி கமலா ஹாரிஸைத் தேர்வு செய்துள்ளேன். அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல்முறையாக இந்தியாவைச் பூர்வீகமாகக் கொண்ட பெண் தேர்தலில் போட்டியிடுகிறார்.

Leave your comments here...