புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆத்ம நிர்பார் உத்தரப்பிரதேச ரோஜ்கார் திட்டம் – பிரதமர் மோடி துவங்கி வைத்தார்

அரசியல்இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆத்ம நிர்பார் உத்தரப்பிரதேச ரோஜ்கார் திட்டம் – பிரதமர் மோடி துவங்கி வைத்தார்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு  ஆத்ம நிர்பார் உத்தரப்பிரதேச ரோஜ்கார் திட்டம் – பிரதமர் மோடி  துவங்கி வைத்தார்

கொரோனா பெருந்தொற்று தொழிலாளர்கள் அனைவரையும் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களை, வெகுவாக பாதித்துள்ளது ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பினர். புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்துதருவது; வாழ்வாதாரத்திற்கான வழி ஏற்படுத்திக் கொடுப்பது; ஆகியவற்றின் அவசியம் காரணமாக, கொரோனா பாதிப்பை சமாளிப்பது மேலும் சவாலானது. பல்வேறு பிரிவுகளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக, ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பை மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் பின்தங்கிய பகுதிகளில் கட்டமைப்பை உருவாக்குவதற்கு அதிக கவனம் செலுத்தும் வகையில், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டம் 20 ஜூன் 2020 அன்று தொடங்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் ஏறத்தாழ 30 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலம் திரும்பியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 31 மாவட்டங்களில் 25000க்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பி வந்திருக்கிறார்கள். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களும் இதில் அடங்கும்.

மத்திய அரசின் திட்டங்களையும் மாநில அரசின் திட்டங்களையும், இதர தொழில்துறை மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்துவதற்காக ஆத்ம நிர்பார் உத்தரப்பிரதேச ரோஜ்கார் திட்டம் ஒன்றை உத்தரப்பிரதேச அரசு உருவாக்கியுள்ளது. வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது, உள்ளூர்த் தொழில் முனைவோரை ஊக்குவிப்பது வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக தொழில்துறை அமைப்புகளுடன் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வது, இதர அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது ஆகியவற்றில் இத்திட்டம் தீவிர கவனம் செலுத்தும்.

இத்திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொளி மாநாடு மூலம் உத்தரப்பிரதேச முதல்வர் முன்னிலையில் துவங்கி வைத்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சம்மந்தப்பட்ட அமைச்சர்களும் இந்த மெய்நிகர் துவக்க விழாவில் பங்கேற்றார்கள். உத்தரப்பிரதேசத்தில் 6 மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் பொதுச் சேவை மையங்கள், கிருஷி விஞ்ஞான் கேந்திரங்கள் ஆகியவை மூலமாக இந்நிகழ்ச்சியில் இணைந்து கொண்டார்கள்.


பின்னர் காணொளி மூலம் பேசிய பிரதமர் மோடி:- கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத வரை, தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி, தனிப்பட்ட சுகாதாரத்தை நன்கு பேணுதல், சோப்பு போட்டு கைகளை தவறாமல் கழுவுதல், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசத்தால் வாயை மூடுவது, மற்றும் மிகவும் முக்கியமானது ஆறு அடி தூரம் சமுக இடைவெளியை கடைபிடிப்பது என்று அவர் கூறினார். மேலும், முகக்கவசத்தை பயன்படுத்துவது எப்படி என்பதை தனது சால்வையின் மூலம் செய்து காட்டுவதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வரும் உத்தர பிரதேச அரசின் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மேலும், அந்த மாநிலத்தின் மக்கள்தொகை அளவானது இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய 1,30,000 உயிரிழப்புகளைக் கண்ட நான்கு நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது என்று சுட்டிக்காட்டினார்.இந்த நாடுகள் ஒரு காலத்தில் உலகை வென்றன, உலகின் மிகப்பெரிய சக்திகளாக இருந்தன, ஆனால் இந்த நாடுகளின் மக்கள்தொகையை சேர்த்து பார்த்தால், அது 24 கோடியாகிறது. ஆனால் இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் மட்டும் 24 கோடி மக்கள் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நான்கு ஐரோப்பிய நாடுகளையும் சேர்ந்து 1,30,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதிலிருந்து உத்தர பிரதேச அரசு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதைக் காணலாம். உத்தர பிரதேசத்தில் உயிரிழப்பு 600ஆக தான் உள்ளது. இதன் மூலம் உத்தர பிரதேச அரசு இந்த பிரச்னையை விரைவாகவும், திறமையாகவும் கையாண்டு வருவதை காட்டுகிறது என்று அவர் கூறினார். ஒவ்வொரு உயிரும் முக்கியமானது. இந்தியாவிலோ அல்லது உலகின் வேறு எந்த இடத்திலோ, உயிர்களை இழப்பது என்பது வருத்தமான ஒன்றாகதான் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...