பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமை பற்றி பாகிஸ்தானியர்களிடம் கேளுங்கள் – முதல்வர் யோகி ஆதித்யநாத்..!

இந்தியா

பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமை பற்றி பாகிஸ்தானியர்களிடம் கேளுங்கள் – முதல்வர் யோகி ஆதித்யநாத்..!

பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமை பற்றி பாகிஸ்தானியர்களிடம் கேளுங்கள் – முதல்வர் யோகி ஆதித்யநாத்..!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது பிரம்மோஸ் ஏவுகணையின் செயல்பாடு குறித்த கிளிம்ப்ஸை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதை பார்க்காதவர்கள் பிரம்மோஸின் வலிமை குறித்து பாகிஸ்தானியர்களிடம் கேளுங்கள்” என உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

லக்னோ நகரில் நடைபெற்ற பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மைய திறப்பு விழாவில் பங்கேற்ற போது யோகி ஆதித்யநாத் இதை தெரிவித்தார். இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மையத்தை திறந்து வைத்தார்.

மேலும், தீவிரவாதத்தை அழிக்க வேண்டிய நேரம் இது. அதை செய்ய பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட வேண்டும் என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

“பிரம்மோஸ் ஏவுகணை என்றால் என்ன என்பதை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அதன் கிளிம்ப்ஸை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதை பார்க்காதவர்கள் பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமை குறித்து பாகிஸ்தானியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

எந்தவொரு தீவிரவாத செயலும் தேசத்துக்கு எதிரான போராகக் கருதப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தீவிரவாதத்தை முற்றிலுமாக அழிக்கும் வரை, இந்தப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் இருக்காது. அதை நசுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்காக, முழு இந்தியாவும் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றுபட வேண்டும்.

தீவிரவாதத்துக்கு அதன் பாஷையில் பதில் கொடுக்க வேண்டும். அதற்கான மெசேஜை ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகத்துக்கு இந்தியா சொல்லியுள்ளது” என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Leave your comments here...