கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரையும் நவம்பர் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 6 கைதிகளையும் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. ஆஜர்படுத்திய நிலையில், நீதிபதி இளவழகன் உத்தரவு பிறப்பித்தார். என்.ஐ.ஏ. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கைதிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
தமிழகம்
November 8, 2022

Leave your comments here...