பழுதான சாலைகளை சீரமைக்க பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை நகரில் பழுதான சாலைகளை, மாநகராட்சி நிர்வாகம் பழுது நீக்க வேண்டும் என, மதுரையில் நடைபெற்ற பாஜக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாநகர் பாலரெங்கபுரம் மண்டல் செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் கே கே சீனிவாசன் அறிவுரைத்தல்படி, பாலரெங்கபுரத்தில் நடைபெற்றது.

இதில், மண்டல் தலைவர் ஜெ.கே.ரவி தலைமையில், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் கார்த்திக் பிரபு , மாவட்டச் செயலாளர்கள் ரோஜராணி, பழனிவேல், பிரச்சார பிரிவுத் தலைவர் பெட்டிக்கடை ரவிச்சந்திரன், ஊடகப்பிரிவு தலைவர் ராம்குமார் , மண்டல் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் வார்டுதலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.