சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்.!

Scroll Down To Discover
Spread the love

சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த புதுச்சேரியைச் சேர்ந்த இளங்கோவன் பஞ்சநாதன் என்ற பயணியிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவரது உடலில், இருந்து 668 கிராம் தங்கப் பசை மீட்கப்பட்டது. அதிலிருந்து 578 கிராம் தங்கம் பரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.28 லட்சம். அவரை கைது செய்து மேலும் விசாரித்து வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.