வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்படி, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அவனியாபுரம் காவல்துறையினர் சோதனை செய்தனர் அப்போது, ஜெயந்தி புரத்தை சேர்ந்த ஜெயசீலன் வயது 50 என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.