ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகம் : இனி கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை..!

தமிழகம்

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகம் : இனி கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை..!

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகம் : இனி கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை..!

தமிழகத்தில் மொத்தமுள்ள சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் தற்போது ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.இதன்மூலம் ரேஷன் பொருள் வாங்க சென்றால், ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோர்டை, கடை ஊழியரிடம் உள்ள பாயிண்ட் ஆப் சேல் மிஷனில் ஸ்கேன் செய்வார். இதையடுத்து அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும்.

இந்த நடைமுறைப்படி குடும்பத்தினருக்கு தெரியாமல் அவர்களின் பொருட்களை ரேஷன் கடைகளில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை. எனினும் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர் மற்றும் குடும்ப உறுப்பினர் உள்பட யார் வந்து கார்டை காட்டினாலும் ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை வழங்கி வருகிறார்கள். . இதுபோன்ற நடைமுறைகளால் சில முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது

இதனால், பயோமெட்ரிக் முறையை ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பயோமெட்ரிக் முறை நேற்று முதல் (27ம் தேதி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் யார் வேண்டுமானாலும் இனி ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க முடியாது. குடும்ப அட்டையில் (ஸ்மார்ட் கார்டு) உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைக்கு வந்து கைரேகை வைத்து பொருட்களை பெற்று செல்ல முடியும். உண்மையான பயனாளர்களுக்கு இனி பொருட்கள் போய் சேரும். ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வராதவர்களுக்கு இனி ரேஷன் பொருட்கள் கிடைக்காது. இதன்மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave your comments here...