இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை’ ஊக்குவிக்க கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு – சுந்தர் பிச்சை அறிவிப்பு…!

பிரதமர் மோடி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் இன்று காணொளிக்காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.இருவருக்கும் இடையேயான இந்தச் சந்திப்பில், வேலை சூழலில் கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், மற்றும் தகவல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
This morning, had an extremely fruitful interaction with @sundarpichai. We spoke on a wide range of subjects, particularly leveraging the power of technology to transform the lives of India’s farmers, youngsters and entrepreneurs. pic.twitter.com/IS9W24zZxs
— Narendra Modi (@narendramodi) July 13, 2020
இன்று காலை சுந்தர்பிச்னையுடன் மிகவும் பயனுள்ள ஆலோசனை நடத்தினேன். பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம். முக்கியமாக, தொழில்நுட்பத்தின் ஆற்றலை பயன்படுத்தி, இந்திய விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோரின் வாழ்க்கையை மாற்றுவது குறித்து ஆலோசித்தோம்.ஆலோசனையின் போது, சுந்தர்பிச்சையும், நானும், கொரோனா காலத்தில் உருவாகியுள்ள புதிய தொழில் கலாசாரம் குறித்து பேசினோம். விளையாட்டு உள்ளிட்ட துறைகளில், கொரோனா கொண்டு வந்துள்ள சவால்கள் குறித்து ஆலோசித்தோம். சைபர் பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசித்தோம்.கல்வி, கற்பித்தல், டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பணபரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், கூகுள் நிறுவனத்தின் முயற்சிகள் குறித்து அறிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வேகப்படுத்த உதவுவதற்காக, 10 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்கிறோம். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கொள்கையை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறோம். அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் ரமேஷ் பொக்ரியாலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
Today at #GoogleForIndia we announced a new $10B digitization fund to help accelerate India’s digital economy. We’re proud to support PM @narendramodi’s vision for Digital India – many thanks to Minister @rsprasad & Minister @DrRPNishank for joining us. https://t.co/H0EUFYSD1q
— Sundar Pichai (@sundarpichai) July 13, 2020
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ஆறாவது ஆண்டு ‘கூகுள் ஃபார் இந்தியா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சுந்தர் பிச்சை. இதில் பேசிய அவர், அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் 75,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பங்கு முதலீடுகள், கூட்டாண்மைகள், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் இதைச் செய்வோம் எனவும், இது இந்தியாவின் எதிர்காலம் மற்றும் அதன் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த நமது நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் எனவும் சுந்தர் பிச்சை இந்த மாநாட்டில் பேசுகையில் தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், “இந்தியர்களுக்கு தங்கள் சொந்த மொழியில் எளிமையாகத் தகவல்களை அணுக இந்த முதலீடுகள் மூலம் கவனம் செலுத்தப்படும். இரண்டாவதாக இந்தியாவின் தேவைகளுக்குப் பொருத்தமான கூகுள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல். மூன்றாவதாக, வணிகங்களை மேம்படுத்துவது. நான்காவது சமூக நலனுக்காக, சுகாதாரம், கல்வி மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் புதிய தொழில்நுட்பம் மற்றும் AI (செயற்கை நுண்ணறிவு) ஐ மேம்படுத்துவது ஆகியவை இந்த முதலீட்டின் முக்கியமான நான்கு குறிக்கோள்களாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...