தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெற்றார் தமிழிசை சவுந்தரராஜன்..!!

சமூக நலன்

தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெற்றார் தமிழிசை சவுந்தரராஜன்..!!

தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெற்றார் தமிழிசை சவுந்தரராஜன்..!!

தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர், தமிழிசை சவுந்தரராஜன். இவரை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமித்து, கடந்த 1-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது.இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திர சிங் சவுகான் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

ஆளுநராக பதவியேற்றதைத் தொடர்ந்து பின்னர் மேடையை விட்டு கீழே சென்ற தமிழிசை சவுந்தராஜன், தமது தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். இவ்விழாவில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தெலங்கானா மாநில உயர் அரசு அதிகாரிகள்,இந்திய முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம்எஸ்.முஸ்தபா , தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க நிர்வாகிகள், தொழில் அதிபர் எஸ்.எஸ்.எஸ்.சந்திரன் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

…நமது நிருபர்

Comments are closed.