கொரோனா தடுப்பு நிவாரண நிதி ; மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கிய சிறுமிகள்…!!

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரவி வரும் கொரோனா வைரஸைத் தடுக்கவும் அதன் தாக்கத்திலிருந்து மீளவும் போர்க்கால அடிப்படையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவ அவசர கால குடிமக்களுக்கான உதவி மற்றும் மீட்பு நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு அனைத்து தரப்பு மக்களும் நிதியுதவி வழங்க பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசுத் தலைவர் தொடங்கி அனைத்து தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களால் முடிந்த நிதி உதவிகளை பொதுமக்கள் வழங்க முன்வரலாம் என தமிழ அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து தின்தோறும் பல்வேறு நிறுவனங்கள், பிரபலங்கள்,தன்னார்வலர்கள், பள்ளி குழந்தைகள் என தங்காள் இயன்ற நிதி உதவியை செய்து வருகிறார்கள்.
சிறிய தொகையாக இருந்தாலும் பள்ளி குழந்தைகள் அனுப்பி வைக்கும் நிதிக்கு அரசு அதிகாரிகள், கட்சி தலைவர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் வெள்ளைக் குளக்கரை தெருவை சேர்ந்த தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள் பிரபலட்சுமி, விபுஷ்ணா ஆகியோர் சேமித்து வைத்திருந்த ரூ. 1630 யை கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்களிடம் இன்று வழங்கினார்கள்.
Leave your comments here...