கொரோனோ வைரஸ் பரவல் : காவல்துறையினருக்கு 22 கட்டுப்பாடுகள் விதித்த தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு..!

கொரோனோ பரவலைத் தடுக்க தமிழக காவல்துறையினருக்கு 22 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழக டிஜிபி திரிபாதி சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- சென்னையில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களையும், கொரானா அறிகுறி உடையவர்களையும் கண்காணிக்கும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறை அதிகாரிகளும் பணிபுரிய உள்ளனர். ஒவ்வொரு உதவி ஆணையர் கீழ் உள்ள உதவி ஆய்வாளர் தனிமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் கீழ் மூன்று காவலர்கள் செயல்படுவார்கள்”எனக் கூறியுள்ளார்.
மேற்கொண்டு, கொரானா பாதிக்கப்பட்டவர்களையும் அதன் அறிகுறி உடையவர்களையும் அணுகுவதற்கான பிரத்தியேகமாக உடல் கவசம், முகக்கவசம் தற்காப்பு பொருட்கள் காவல்துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கொரானா அறிகுறி மற்றும் பாதிப்புக்குள்ளானவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் கண்காணிப்பர் என்றும் பாதிப்புக்குள்ளானவர்களைத் தனிமைப்படுத்தவும், வெளியில் யாரிடமும் சென்று நோய் பரவாமல் இருக்கவும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காய்ச்சல் இருமலுடன் காவல்நிலையத்திற்கு யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்கக்கூடாது, காவலர்களுக்குக் கூட்டங்கள் நடத்தத் தடை, காவல் நிலையத்திற்கு வரும் புகார்தாரர்கள் அனைவரும் சோதனை செய்ய வேண்டும், இமெயில், செல்போன், தபால் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பன போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
Leave your comments here...