240 புதிய பேருந்துகள், 2 நடமாடும் பணிமனைகளை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்.!

தமிழகம்

240 புதிய பேருந்துகள், 2 நடமாடும் பணிமனைகளை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்.!

240 புதிய பேருந்துகள், 2 நடமாடும் பணிமனைகளை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்.!

ரூ.600 மதிப்பீட்டில் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார்.

அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ரூ.84 கோடி செலவில் வாங்கப்பட்ட புதிய 240 பேருந்துகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் கொடி அசைத்து இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.


இந்த புதிய பேருந்துகளில் 37 பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டவை ஆகும். இவை சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 103 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.


இதனை அடுத்து திருச்சி மற்றும் தஞ்சை ஊரை மையமாக கொண்டு இயங்கக்கூடிய வகையில் ரூ.10 லட்சம் செலவில் வாங்கப்பட்ட இரண்டு அம்மா அரசு நடமாடும் பணிமுனை சேவையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

Leave your comments here...