#OperationKiller : லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை – பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை!

ஸ்ரீநகர்: சோபியானில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவரும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது. பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வரும் இந்திய ராணுவம், அவர்களது தலைக்கு#Article370 | ரூ.20 லட்சம் வெகுமதி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று ஆபரேஷன் கெல்லர் என்ற தீவிரவாதிகளை தேடி அழிக்கும் வேட்டையை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம்.ஜம்மு – காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் ஷூகல் கெல்லர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரை சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் தாக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் இறங்கினர். இரு தரப்பிலும் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து பாதுகாப்பு படை உயரதிகாரிகள் கூறியதாவது;
தெற்கு காஷ்மீர் சுக்ரு வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினோம். எங்களுடன் போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். நாங்களும் பதிலடி தந்தோம். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் இருவரின் அடையாளம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியதாவது: முதலாவது நபர் ஷோபியான் மாவட்டத்தின் ஹீரபோரா பகுதியை சேர்ந்த ஷாகித் குட்டாய். இவன் 2023 மார்ச் 08 ல் லஷ்கர் இ தொய்பாவில் இணைந்துள்ளான். கடந்த 2024 ஏப்.,08 ல் இரண்டு ஜெர்மன் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 3 பேர் காயமடைய காரணமான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு காரணமானவன் 2024 மே 18 ல் ஹீரபோரா பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்பு உள்ளது இரண்டாவது பயங்கரவாதி ஷோபியானின் மெல்ஹோரா பகுதியைச் அத்னன் ஷபி தர். இவன் 2024 அக்., 18 ல் லஷ்கர் இ தொய்பாவில் இணைந்துள்ளான். சோபியனின் வாஷி பகுதியில் காஷ்மீரி அல்லாத தொழிலாளர்களை கொன்ற சம்பவத்தில் இவனுக்கு தொடர்பு உண்டு.
Leave your comments here...