பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.!

தமிழகம்

பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.!

பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, விளையாட்டு மைதானத்தில், போக்குவரத்துத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன், பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன், ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:சிவகங்கை மாவட்டத்தில் ,பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சரியான முறையில் உள்ளதா என்பது குறித்து, போக்குவரத்துத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் கூட்டாய்வு இன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், வாகனத்தின் நிறம், பள்ளி பற்றிய விபரம், தொடர்பு எண்கள், பிரதிபலிப்பான் பட்டைகள், பிரேக் திறன், உருளைப்பட்டைகளின் நிலை, அவசரக்கதவின் நிலை, வாகனத்தின் கதவுகள் இயக்க நிலை, வாகனத்தின் இருக்கை நிலை, வாகனத்தின் படிக்கட்டுகள், வாகன ஓட்டுனரின் இருக்கை, வாகனத்தின் உட்புறம், தரைப்பலகை, ஜன்னல்கள், சிவப்பு மற்றும் வெள்ளை பிரதிபலிப்பான், நாடாக்கள், முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகள், தீயணைக்கும் கருவி மற்றும் வேகக்கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றின் நிலை குறித்து கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இதில் குறைபாடுகள் கண்டறியப்படும் வாகனங்களில் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்விற்கு சமர்ப்பித்து, சான்றுகள் பெற்ற பின்புதான் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்ல வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். வாகன ஓட்டுநர்கள் வாகனத்தினை இயக்குவதற்கு முன்னர் வாகனத்தினை பரிசோதனை செய்த பின்னரே, வாகனத்தினை இயக்கிட வேண்டும். வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது முழு கவனத்துடன் வாகனத்தை இயக்குவதோடு, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான வேகத்தில் இயக்கக் கூடாது. வாகனம் இயக்கும் போது மது அருந்துதல், கைபேசியை உபயோகித்தல் உள்ளிட்ட செயல்முறைகள் இருத்தல் கூடாது. எதிரில் வாகனம் எதுவும் வரவில்லை என உறுதி செய்த பின்னரே, பிற வாகனத்தினை கடந்து செல்ல முயற்சிக்க வேண்டும்.

வாகனத்தில், குறிப்பிடப்பட்டுள்ள குழந்தைகளை மட்டுமே ஏற்றிட வேண்டும். குழந்தைகள் வாகனத்தில் ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் அதனை கவனித்து நிதானமாக வாகனத்தினை இயக்கிட வேண்டும். வாகன ஓட்டுநர்கள் தீயணைப்பது குறித்த பயிற்சியினையும், முதலுதவி வழங்குவது குறித்த பயிற்சியினையும் பெற்றிட வேண்டும். இது தொடர்பாக, அனைத்து பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் பாதுகாப்பான முறையில் வாகனத்தை இயக்குவது குறித்த சிறப்பு பயிற்சிகளும் இந்நிகழ்வில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்
பட்டுள்ளது.

சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் உள்ள சிவகங்கை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம், சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய 7 வட்டாரங்களுக்குட்பட்ட 64 பள்ளிகளை சேர்ந்த 175 பள்ளி வாகனங்கள் மற்றும் காரைக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் உள்ள காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய 2 வட்டாரங்களுக்குட்பட்ட 45 பள்ளிகளை சேர்ந்த 140 பள்ளி வாகனங்கள் என மொத்தம் 109 பள்ளிகளை சேர்ந்த 315 பள்ளி வாகனங்கள் மாவட்டத்தில் உள்ளன.

அதில், சிவகங்கை வட்டாரங்களைச் சார்ந்த 110 வாகனங்களும் மற்றும் காரைக்குடி வட்டாரங்களைச் சார்ந்த 105 வாகனங்களும் என மொத்தம் 215 வாகனங்களில் இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் பராமரிப்பு பணியில் உள்ளதால், பராமரிப்பு பணிகள் முடிவுற்ற பின், ஆய்விற்கு முறையாக உட்படுத்தப்பட்டு, பின்னர் சான்றுகள் வழங்கப்படும் என, மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன், தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, வட்டார போக்குவரத்து அலுவலர் அ.மூக்கன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆர்.மாணிக்கம் மற்றும் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

– மதுரை ரவிசந்திரன்

Leave your comments here...