காங்கிரஸ் தலைவர்கள் மீது வேண்டும் என்றே பொய் வழக்கு – காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

அரசியல்

காங்கிரஸ் தலைவர்கள் மீது வேண்டும் என்றே பொய் வழக்கு – காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

காங்கிரஸ் தலைவர்கள் மீது வேண்டும் என்றே பொய் வழக்கு – காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

காங்கிரஸ் தலைவர்கள் மீது வேண்டும் என்றே பொய் வழக்கு பதிவு செய்வதாகவும், பா.ஜனதா அரசினை கண்டித்தும் குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று காலையில் திங்கள்சந்தை அருகே உள்ள பிலாக்கோடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொகுதி தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், குமரி கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ஜாண்சவுந்தர், குருந்தன்கோடு வட்டார தலைவர் ஜெரால்டுகென்னடி, திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், கல்லுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் மனோகர்சிங், பங்கேற்றனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் லாரன்ஸ் அவர்கள் சிறப்புரையாற்றினர். மேலும் ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் விஜூமோன், தொகுதி பொதுச்செயலாளர்கள் தவசுமணி, ஆல்பர்ட், டிஜு, விஷ்ணு, வின்சென்ட், எமில், அரவிந்த்,மணிகண்டபிரபு, குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுசெயலாளர் மதியழகன், ஸ்டார்வின், முன்னாள் திங்கள்நகர் பேரூர் காங்கிரஸ் தலைவர் தேவதாசன், கே எஸ் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

– Tharnesh.H

Leave your comments here...