தாம்பரம் – செங்கல்பட்டு 3வது ரயில் பாதை – வரும் 26ம் தேதி சென்னையில் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..!

தமிழகம்

தாம்பரம் – செங்கல்பட்டு 3வது ரயில் பாதை – வரும் 26ம் தேதி சென்னையில் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..!

தாம்பரம் – செங்கல்பட்டு 3வது ரயில் பாதை – வரும் 26ம் தேதி சென்னையில்  பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..!

தாம்பரம் – செங்கல்பட்டு மூன்றாவது பாதை, மதுரை – தேனி அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தை, வரும் 26ம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..

சென்னையில் நடை பெறும் அரசு விழாவில் பங்கேற்க 26ந் தேதி காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ரவி மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவரை வரவேற்கிறார்கள். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத் திடல் அருகே உள்ள கடற்படை தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து காரில் விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்துக்கு வருகிறார். இந்த விழாவில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். நிறைவடைந்த பணிகளை தொடங்கி வைக்கிறார்.

* பெங்களூர்-சென்னை நான்கு வழி சாலையின் 3ம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
* சென்னையில் புதியதாக அமைய உள்ள மல்டி மாடல் லாஜிஸ் டிக் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
* ஓசூர்-தருமபுரி இடையேயான 2 மற்றும் 3-ம் கட்ட நெடுஞ்சாலை பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
* மீன்சுருட்டி-சிதம்பரம் இடையே புதிதாக அமைக்கப்படும் நெடுஞ்சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் மத்திய நகர்ப்புற வீட்டு வசதித் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, ரெயில்வே துறை, சார்பில் செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மொத்தம் ரூ.12 ஆயிரத்து 413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே, 386 கோடி ரூபாய் செலவில், 30 கி.மீ., துாரம் மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்து, பயணியர் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை – போடிநாயக்கனுார் இடையே, 450 கோடி ரூபாய் செலவில், 98 கி.மீ., மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், மதுரை – தேனி வரை அகல ரயில் பாதை பணி முடிந்து, அதிவேக ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், 26ம் தேதி மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, இவற்றை துவக்கி வைக்கிறார்.

Leave your comments here...