கோவிலுக்கு நேர்ந்துவிடும் பசுமாடுகளை விற்ககூடாது – இந்து மகா சபா கோரிக்கை

தமிழகம்

கோவிலுக்கு நேர்ந்துவிடும் பசுமாடுகளை விற்ககூடாது – இந்து மகா சபா கோரிக்கை

கோவிலுக்கு நேர்ந்துவிடும் பசுமாடுகளை விற்ககூடாது – இந்து மகா சபா கோரிக்கை

சேலம் மாவட்டம் ஸ்ரீசித்தேஸ்வரர் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் நடத்த வேண்டியும்,ஆலயத்திற்க்கு நேர்ந்துவிடப்படும் பசு மாடுகள் மற்றும் காளை மாடுகள் விற்பனை செய்யாமல் கோசாலை அமைத்து பராமரிக்க வேண்டும் எனவும் கோவிலை சுகாதாரமாக வைக்க வேண்டியும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்யாமல் பாதுகாக்க வேண்டும் எனவும் இந்து அறநிலையத்துறை அதிகாரி செயல் அலுவலரிடம் இந்து மகா சபா சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் சண்முக செல்வராஜ் ,மண்டல தலைவர் காசிலிங்கம், தெற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகர் மற்றும் நிர்வாகிகள் சித்தர் கோவில் கிராம மக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்…

Leave your comments here...