இந்திய ராணுவ வீரர்களுக்கு அடுத்த ஆண்டு புதிய சீருடை அறிமுகம்..!

இந்தியா

இந்திய ராணுவ வீரர்களுக்கு அடுத்த ஆண்டு புதிய சீருடை அறிமுகம்..!

இந்திய ராணுவ வீரர்களுக்கு  அடுத்த ஆண்டு புதிய  சீருடை அறிமுகம்..!

இந்திய ராணுவ வீரர்களுக்கு அடுத்த ஆண்டு புதிய வடிவிலான சீருடை வழங்கப்படவுள்ளது.

ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: அடுத்த ஆண்டு ராணுவத்துக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்படுகிறது. ஜனவரி 15-ந்தேதி நடைபெற உள்ள ராணுவ தின அணிவகுப்பில் இந்த புதிய சீருடையை ராணுவ வீரர்கள் முதல்முறையாக அணிந்து பங்கேற்பார்கள்.

பல்வேறு நாடுகளின் ராணுவ சீருடைகளை ஆய்வு செய்து, விரிவான ஆலோசனைக்கு பிறகு இந்த சீருடை இறுதி செய்யப்பட்டுள்ளது. இது, மிகவும் நீடித்து உழைக்கக்கூடியது. கோடை காலத்திலும், குளிர் காலத்திலும் அணிந்து கொள்ள சவுகரியமானது.

ராணுவ வீரர்கள் பணியாற்றும் இடம், அங்குள்ள வானிலை ஆகியவற்றை கருத்திற்கொண்டு, சீருடை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதுபோல், கடற்படைக்கு கடந்த ஆண்டு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டது.

Leave your comments here...