இந்தியாவின் புதிய முயற்சி..! ஆளில்லா ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்

இந்தியா

இந்தியாவின் புதிய முயற்சி..! ஆளில்லா ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்

இந்தியாவின் புதிய முயற்சி..! ஆளில்லா ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்

இந்தியா தற்போது ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்ததையடுத்து தடுப்பு மருந்துகள் முழு வீச்சில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

ஒரேநாளில் இரண்டு கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பு மருந்துகள் குடிமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விமானங்கள், லாரிகள், பேருந்துகள், உள்ளிட்ட பலவகையான போக்குவரத்து வாகங்கள் மூலமாக தடுப்பு மருந்து பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தன. தற்போது பரிசோதனை முயற்சியாக ட்ரோன்கள் மூலமாக தடுப்பு மருந்து விநியோகிக்கப்படுகிறது.

ஆளில்லா ட்ரோன் மூலமாக தடுப்பு மருந்தை வினியோகிப்பது குறித்து இந்திய மருத்துவத்துறை நீண்டகாலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. இது நடைமுறையில் சாத்தியப்படுமா என்று ஆலோசித்து வந்த விஞ்ஞானிகள் இதனை தற்போது செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள லோக்டக் ஏரியில் உள்ள மிதக்கும் தீவுகள் என எனப்படும் பகுதிக்கு ஆளில்லா ட்ரோன் மூலமாக தடுப்பு மருந்து உரிய நேரத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்த ஒரு தெற்காசிய நாடும் ட்ரோன் மூலம் தடுப்பு மருந்து கொண்டு செல்லும் முறையை பரிசோதித்துப் பார்த்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மருத்துவத்துறையின் இந்த புதிய முயற்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Leave your comments here...