கடை உரிமையாளரை மிரட்டிய சாட்டை துரைமுருகன் மீது மேலும் 4 வழக்குகள் பதிவு.!

அரசியல்

கடை உரிமையாளரை மிரட்டிய சாட்டை துரைமுருகன் மீது மேலும் 4 வழக்குகள் பதிவு.!

கடை உரிமையாளரை மிரட்டிய சாட்டை துரைமுருகன் மீது மேலும் 4 வழக்குகள் பதிவு.!

திருச்சியில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை விமர்சனம் செய்ததாக வாகன பழுது நீக்கும் மைய உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சியினர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சாட்டை துரைமுருகன் மீது மேலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில இளைஞர் அணியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் , வினோத், சரவணன், சந்தோஷ் ஆகிய 4 பேர் யூடியூபை திருச்சியில் வாகன பழுது நீக்கும் மைய ஊழியரை மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சாட்டை திருமுருகன் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். வினோத் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டவர்.

சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழகர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற எம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோரை காவல்துறை திடீரென கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.


மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு. இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல். சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், கைதான யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது குழந்தைகள் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட புகாரில் மேலும் 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave your comments here...