தமிழகத்திற்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 2787 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்..!

தமிழகம்

தமிழகத்திற்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 2787 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்..!

தமிழகத்திற்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 2787 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்..!

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு 2787 மெட்ரிக் டன் மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது.

25000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவைக் கொண்டு சேர்த்து, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புதிய மைல்கல் சாதனையைப் படைத்துள்ளன.

இதுவரை 1,503 டேங்கர்களில் 25,629 மெட்ரிக் டன் பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.இதுவரை 368 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 30 டேங்கர்களில் சுமார் 482 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 7 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. ஜார்க்கண்டில் இருந்து 4 டேங்கர்களில் 80 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் பிராணவாயுவுடன் ஐந்தாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் அசாம் சென்றடைந்தது. கர்நாடகா மாநிலத்திற்கு சுமார் 3000 மெட்ரிக் டன் பிராணவாயு, இந்த ரயில்கள் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன.

இதுவரை தமிழகத்திற்கு 2,787 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5790 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2212 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 3097 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 2602 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 2474 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.கூடுதலாக சில ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று இரவு தங்களது பயணத்தைத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...