ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தமிழகத்திற்கு 1550 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்

தமிழகம்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தமிழகத்திற்கு 1550 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தமிழகத்திற்கு 1550 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்

நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் வழங்கும் இந்திய ரயில்வே, இதுவரை 1141 டேங்கர்களில் 18,980 மெட்ரிக் டன் பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்துள்ளது.

இதுவரை 284 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 20 டேங்கர்களில் 392 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 4 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.ஒரு நாளில் மிக அதிகமாக 1195 மெட்ரிக் டன் பிராணவாயு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இதற்கு முன்பாக கடந்த 23-ஆம் தேதி 1142 மெட்ரிக் டன் பிராணவாயு, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் விநியோகம் செய்யப்பட்டது.

தென் இந்தியாவைப் பொறுத்தவரையில், தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் தலா 1000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவைப் பெற்றுள்ளன.தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன.

இதுவரை தமிழகத்திற்கு 1550 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3731 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5077 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 1967 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 1653 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 1190 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 380 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 1312 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 160 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

Leave your comments here...