சோழவந்தான் உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா.!

ஆன்மிகம்தமிழகம்

சோழவந்தான் உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா.!

சோழவந்தான் உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா.!

சோழவந்தான் பூ மேட்டு தெரு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ உச்சி மகா காளியம்மன் கோவில் வடக்கத்தி காளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் எடுத்து வந்தனர் இவ்விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி மாநில விவசாய செயலாளர் மணி முத்தையா தலைமை தாங்கினார் நிர்வாகி வள்ளியம்மாள் பள்ளி தாளாளர் மருது பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீர்த்த குடம் மற்றும் பால்குடம் எடுக்கும் பக்தர்களுக்கு மஞ்சளாடை பூஜை பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினார்கள்.

கோவிலிலிருந்து மேளதாளத்துடன் பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பூஜைகள் செய்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெரியவர்கள் தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் எடுத்து அங்கிருந்து வடக்கு ரதவீதி பெரிய கடை வீதி தெற்கு ரத வீதி மேல ரதவீதி வழியாக கோவிலில் வந்து அடைந்தனர் அம்மனுக்கு பால் தயிர் உட்பட பன்னிரண்டு அபிஷேகங்கள் நடந்து மகா அபிஷேகம் நடந்தது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

Leave your comments here...