16வது முறையாக கொரோனா நிவாரான நிதி அளித்த முதியவர்..!

Scroll Down To Discover

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். பொதுச்சேவையில் ஆர்வம்கொண்ட இவர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார்.

பூல்பாண்டியன் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் அரசுப்பள்ளியில் தங்கியபடி மதுரையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தைக் கடந்த மே மாதம் கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 16- வது தடவையாக கொரோனா நிவாரன நிதியாக அளித்தார் முதியவரும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன். இவர் இதுவரை கொரோனா நிவாரான நிதியாக யாசகம் பெற்ற பணத்தில் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய்யிடம் வழங்கியுள்ளார்.