இந்திரா காந்தி நினைவு தினம் – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மலர் தூவி அஞ்சலி!

அரசியல்

இந்திரா காந்தி நினைவு தினம் – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மலர் தூவி அஞ்சலி!

இந்திரா காந்தி நினைவு தினம் – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மலர் தூவி அஞ்சலி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு இதே நாளில் தனது பாதுகாப்பு படை வீரர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது 35-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் அவரது மருமகளும், காங்கிரஸ் தலைவருமான சோனியாகாந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.இதேபோன்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி,முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

கே. எஸ். அழகிரி தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி

இதேபோல் சென்னை யானைக்கவுனி – வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள அன்னை இந்திரா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே. எஸ். அழகிரி  அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Comments are closed.