பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழையும் வகையில் 150 மீட்டர் நீளத்திற்கு சுரங்க பாதை – கண்டுபிடித்த பாதுகாப்பு படை

இந்தியா

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழையும் வகையில் 150 மீட்டர் நீளத்திற்கு சுரங்க பாதை – கண்டுபிடித்த பாதுகாப்பு படை

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழையும் வகையில் 150 மீட்டர் நீளத்திற்கு சுரங்க பாதை –  கண்டுபிடித்த பாதுகாப்பு படை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கத்துவா நகரில் பன்சார் என்ற இடத்தில் அமைந்த சர்வதேச எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் 150 மீட்டர் நீளம் மற்றும் 30 அடி ஆழம் கொண்ட சுரங்க பாதை ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு ரகசியமாக வருவதற்கு வசதியாக இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.கடந்த ஆறு மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நான்காவது சுரங்கப்பாதை இது என்றும் சர்வதேச எல்லையைத் தாண்டி வர இந்த சுரங்கப்பாதைகளைப் பயங்கரவாதிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். மேலும், சர்வதேச எல்லையில் ஆளில்லா விமானங்கள் மூலம் உணவு மற்றும் ஆயுதங்களைப் பாகிஸ்தான் போட்டுச் செல்வது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடந்த 2019ம் ஆண்டு இந்த பகுதி வழியே கும்பல் ஒன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றது. எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.கடந்த 2020ம் ஆண்டு ஜூனில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஹெக்சாகாப்டர் ஒன்று இதே பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்.எஸ் ஜாம்வால் கூறுகையில், “சுமார் 150 முதல் 175 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதையைச் சர்வதேச எல்லையில் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். சுமார் 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, 2 முதல் 3 மீட்டர் சுற்றளவு கொண்டது.இந்த சுரங்கப்பாதை 6 ஆண்டிலிருந்து 8 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்றார்.

Leave your comments here...