கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத திருவிழா

ஆன்மிகம்

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத திருவிழா

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத திருவிழா

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும் . இது 108 வைணவத் திருத்தலங்களுள்  76 ஆவதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும். திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா தொடங்கியது.  காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சுஜித் நம்பூதிரி கொடி ஏற்றி வைத்தார். குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, ஆதிகேசவா அறகட்டளை செயலாளர் அனந்தகிருஷ்ணன், பக்தர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் கோவில் மேலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கொடியேற்றம்

 

 

 

 

 

 

 

 

 

மேலும்  திருவிழா வருகிற 4-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் (ஞாயிற்றுக்கிழமை முதல் 2-ந் தேதி வரை தினமும் காலையில் நாராயண பாராயணம், சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தீபாராதனை போன்றவை நடைபெறும், வருகிற 3-ந் தேதி காலையில் தீபாராதனை, சாமி பவனி வருதல், இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் சாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல் ஆகியவையும், 4-ந் தேதி காலையில் ராமாயண பாராயணம், மாலையில் சிறப்பு நாதஸ்வர கச்சேரி, இரவு 7 மணிக்கு சாமி கருட வாகனத்தில் ஆறாட்டுக்கு எழுந்தருளல் போன்றவையும் நடைபெறும்.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Comments are closed.