வேலுநாச்சியாரின் வீரமும், துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்’ : பிரதமர் மோடி

Scroll Down To Discover

தமிழகத்தை சேர்ந்த வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளையொட்டி அவரை வணங்கி மகிழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், :- வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன்.


அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்’ என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.