ரயில்வேயில் ஊழியர்கள் தங்கள் ஒருநாள் சம்பளமான ரூ.151 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள்..!

Scroll Down To Discover

கொரானாவால் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிலும் பொருளாதாரமும், சுகாதாரமும் பெரும் அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே விரைவான அவசரகால ஏற்பாடுகள் மற்றும் பயனுள்ள சமூக பின்னடைவுக்கான திறன்களை உருவாக்குவது உள்கட்டமைப்பு மற்றும் நிறுவன திறன் புனரமைப்பு மேம்பாட்டுடன் இணைந்து செய்யப்பட வேண்டும். எனவே நாட்டு மக்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.


இந்நிலையில் ரயில்வேயில் பணிபுரியும் சுமார் 13 லட்சம் ஊழியர்கள் தங்கள் ஒருநாள் சம்பளமான ரூ.151 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான ரூ.151 கோடியை, பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். மேலும் தானும், இணை அமைச்சர் சுரேஷ் அங்காடியும் தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்க உள்ளதாக கோயல் கூறினார்.