இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 96-வது பிறந்த தினம் இன்று , தேசிய நல்ல நிர்வாக தினமாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Delhi: Prime Minister Narendra Modi pays floral tribute to former PM Atal Bihari Vajpayee on his 96th birth anniversary pic.twitter.com/6dcJhfBWUL
— ANI (@ANI) December 25, 2020
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோரும் வாஜ்பாயின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
Delhi: Prime Minister Narendra Modi pays floral tribute to former PM Atal Bihari Vajpayee on his 96th birth anniversary pic.twitter.com/6dcJhfBWUL
— ANI (@ANI) December 25, 2020
முன்னதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “வாஜ்பாய் இந்தியாவை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றார். வலுவான மற்றும் வளமான இந்தியாவை கட்டியெழுப்ப அவர் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1342300505624571905?s=20
Leave your comments here...