காரியாபட்டி: மாநில அளவில் சிலம்பாட்டத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஆவியூர் ஊராட்சியை சேர்ந்த மாணவர்கள்: ஆகாஷ், ரோஹித், லிங்கம்,நிதிஷ்குமார், மது ஷாலினி, ரமணா, லோக பிரகாஷ்,புவநேந்திரன், ரஞ்சித், தருண், ஆகியோர் மதுரையில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் மாநில அளவில் வெற்றிபெற்றனர். திமுக ஊராட்சி செயலாளர் மணிகண்டன் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.பயிற்சியாளர்கள் காராள மூர்ததி, நாராயண மூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.
உள்ளூர் செய்திகள்விளையாட்டு
August 17, 2021
Leave your comments here...