மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

Scroll Down To Discover

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கோவிட் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், தொற்றிலிருந்து மீண்டார்.

இதனால் தொடர்ந்து பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு, புதிய கல்விக்கொள்கை குறித்த ஆலோசனை கூட்டங்களிலும் பங்கேற்றார். இந்நிலையில் இன்று (ஜூன் 1) உடல்நலக்குறைவு காரணமாக ரமேஷ் பொக்ரியால் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவிட் தொற்றுக்கு பிந்தைய பாதிப்பால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.