பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனாவின் 4வது கட்டம் – 56.53 சதவீத உணவு தானியங்கள் விநியோம்

Scroll Down To Discover

பிரதமரின் கரிப் கல்யான் அன்ன யோஜனாவின் 4வது கட்டத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் யூனியன் பிரதேசம், நாட்டிலேயே அதிக சதவீத உணவு தானியங்களை எடுத்துச் சென்றுள்ளது.

பிரதமரின் கரீப் கல்யான் அன்ன யோஜனாவின் 4வது கட்ட ஒதுக்கீட்டில் (2021 ஜூலை முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை) 93 சதவீத உணவு தானியங்களை அந்தமான மற்றும் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசம் எடுத்துச் சென்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஒடிசா 92 சதவீதம், திரிபுரா மற்றும் மேகாலயா 73 சதவீதம், தெலங்கானா, மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் 71 சதவீதம் உணவு தானியங்களை எடுத்துச் சென்றுள்ளன.

4வது கட்டத்தில் நாடு முழுவதும் மொத்தம் 56.53 சதவீத உணவு தானியங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. 3வது கட்டத்தில் 98.41 சதவீத உணவு தானியங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனாவின் 4 கட்டங்களிலும் மொத்தமாக 600 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.