பிபின் ராவத் மறைவு : வாழ்க்கையில் எனக்கு நெருக்கமானவர்கள் பலரை இழந்துவிட்டேன் – கூட்டத்தில் கண் கலங்கிய மோடி.!

Scroll Down To Discover

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் இறந்தது, நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

விபத்து நடந்த அன்று மாலையில் மத்திய அமைச்சரவையின் பாதுகாப்பு குழு கூட்டம் டெல்லியில் பிரதமர் தலைமையில் நடந்தது. இதில் மூத்த மத்திய அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய பிரதமர், ‘வாழ்க்கையில் எனக்கு நெருக்கமானவர்கள் பலரை இழந்துவிட்டேன். அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், கோபிநாத் முண்டே ஆகியோர் நெருக்கமாக இருந்ததுடன் அறிவுரைகளையும் அளித்தனர். அவர்களை இழந்து விட்டேன்.

இப்போது முப்படை தளபதி பிபின் ராவத்’ என கூறிய அவர் கண் கலங்கினார். ஒரு நிமிடம் தன் பேச்சை நிறுத்தி அழுது விட்டார். சக அமைச்சர்களும் கலங்கி விட்டனர். பின் கண்ணீரைத் துடைத்தபடி பிரதமர் பேச்சை தொடர்ந்தார். ஜெனரல் பிபின் ராவத், பிரதமருக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது வீர மரணம் நாட்டிற்கு இழப்பு என்பது ஒரு பக்கம்; அதே நேரத்தில் பிரதமருக்கு பெரும் இழப்பு என்கின்றனர் மூத்த அதிகாரிகள். -விபத்து நடந்ததும் தமிழக முதல்வர் ஸ்டாலினை அங்கு செல்லும்படி டில்லியிருந்து சொல்லப்பட்டதாகவும், புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசையையும் விபத்து நடந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த டில்லியிருந்து உத்தரவு போனதாகவும் கூறப்படுகிறது.