பாகிஸ்தான் சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை..!

Scroll Down To Discover

இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் கராச்சி சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் 631 மீனவர்களின் தண்டனை காலம் முடிந்து நாடு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர். இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் கராச்சி சிறையில் இருந்த இந்திய மீனவர் ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, வரும் 12-ம் தேதி 198 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாக அந்நாட்டின் அரசாங்கம் கூறியிருந்தது.

இந்நிலையில், கராச்சி சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் முதலில் லாகூருக்கு அனுப்பப்பட்டனர். அதன்பின் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.