பஸ்சில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பொறுப்பு – போக்குவரத்து கழகம்..!

Scroll Down To Discover

மாணவர்களின் முறையற்ற பயணத்தை தவிர்க்க ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று போக்குவரத்து கழக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது,

அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது பல்வேறு ஆபத்துக்களுக்கு வழி வகுக்கிறது. பல உயிரிழப்புகள் இதனால் ஏற்படும் நிலையில் பல மாணவர்கள் படுகாயம் அடைகின்றனர். இதை தடுக்கும் வகையில் தமிழக மாநகரப் போக்குவரத்து கழகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் , வழித்தடங்களில் ஏதேனும் மாணவர்கள் படியில் தொங்க நேரிட்டாலோ அல்லது உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ அந்த பேருந்தை நிறுத்தி படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தை தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.

மாணவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் அறிவுரையை கேட்காமல் மீறி செயல்பட்டு. நிலைமை கட்டுபாட்டை மீறினால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பேருந்து இயக்கத்தை போக்குவரத்து இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல் துறை அவசர அழைப்பு 100 எண்ணுக்கோ அல்லது மா.போ.க பிரிவுக்கும் தகவல் தெரிவித்து புகார் அளித்திட வேண்டும். பேருந்துகளில் பள்ளி/கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பொறுப்பு என்பதனை உணர்ந்து பணிபுரிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.