ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை..!

Scroll Down To Discover

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்து நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டி வரும் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டறிந்து அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் உள்ளூர் போலீசாரும் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், சோபியான் மாவட்டம் சுகூ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.நீண்ட நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து, சோபியான் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது தாக்குதல் சம்பவம் ஆகும்.