சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு : 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்..!

Scroll Down To Discover

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி அளித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் அனைத்து வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து 9 மாதங்களுக்குப் பிறகு இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

பின்னர் வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில்:- தனிப்பட்ட உரிமைக்கும், வழிபாட்டு உரிமைக்கும் இடையேயான வழக்கு. தீர்ப்பு இந்து பெண்களுக்கு மட்டுமானது என வரையறுத்து விட முடியாது. பெண்களுக்கான கட்டுப்பாடு சபரிமலையில் மட்டுமல்ல. வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது. சபரிமலை தொடர்பான வழக்கில் மதம் தொடர்பான நம்பிக்கை பற்றி வாதங்களை கருத்தில் கொண்டோம். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்விற்கு மாற்றப்படுகிறது. இவ்வழக்கில் 5 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து விரிவான அமர்விற்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்படுகிறது. 5 நீதிபதிகளை கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள், இவ்வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்ற பரிந்துரைத்தனர். இதனையடுத்து 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்பின் நிலையே தொடரும்..!