சட்டத்திற்குப் புறம்பாக கடையில் வைத்து குட்கா பான்மசாலா விற்பனை செய்த நபர் கைது.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் திருநகர் குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமநாதன் வயது 53. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

ராமநாதன் தனது பெட்டி கடையில் வைத்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை செய்வதாக திருநகர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில், திருநகர் காவல்துறையினர் ராமநாதன் பெட்டிக் கடையில் சோதனை செய்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா இருப்பது தெரியவந்தது இதனை அடுத்து ராமநாதனை கைது செய்த காவல்துறையினர் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா மற்றும் பான் மசாலா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.