கொரோனா விழிப்புணர்வு போட்டி ; பள்ளி கல்வி துறையின் சான்றிதழ் பெற்று அசத்திய மாணவர்கள்

Scroll Down To Discover

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டியில் பங்கு பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட பள்ளி கல்வி துறையும் ,தஞ்சை மலர் நாளிதழும் இணைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டியில் சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழங்கினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துமீனாள், முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஸ்ரீதர் ஆகியோர் செய்திருந்தனர்.