கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இளைஞர்கள் நிவாரண உதவி…

Scroll Down To Discover

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தமிழக அரசு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றது, இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிடும் வகையில், மதுரை திருவாதவூர் ஆயிரவைசிய மஞ்சபுத்தூர் இளைஞர் நலச்சங்கம் சார்பாக, 100க்கும் மேற்பட்டவர்களுக்கு முதல்கட்டமாக அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டு பயனாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

செய்தி: Ravi Chandran