கொரோனா அச்சம் : விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் – 2 பேர் பலி..!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கல்மேடு பகுதி அருகே எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஜோதிகா, இவர் தனது தாய் மற்றும் தம்பிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு ஜோதிகாவிற்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மனம் விரக்தியடைந்த ஜோதிகா ,மற்றும் தனது தம்பிகளுடன் சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ,ஜோதிகா மற்றும் ரித்தீஸ் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். மேலும் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, சிலைமான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.