ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடக்கிறது. நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இந்நிலையில், தும்காவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி.
அப்போது பேசிய அவர் :- குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களை தூண்டிவிடுகின்றன. இந்தியாவுக்கு தப்பிவந்து அகதிகளாக வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச சிறுபான்மை சமூகத்தினருக்கு மரியாதை செலுத்துவதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டங்களை ஆதரிக்கின்றன.

Leave your comments here...