காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மூடைகள் பறிமுதல்.!

Scroll Down To Discover

மதுரை ரிங் ரோட்டில் கேரளாவில் இருந்து காரில் கடத்தப்பட்ட 215 கிலோ கஞ்சா மூடைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கேரளாவை சேர்ந்த கார் டிரைவர் ராபர்ட் விக்டரை போலீஸார் கைது செய்துள்ளனர். அண்ணா நகர் காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் காவல்துறையினர் அதிரடியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.