ஏபிவிபி மாணவர் மீது கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.எஃப்.ஐ மாணவர்கள் கொடூர தாக்குதல்: நடவடிக்கை எடுப்பார கேரளா முதல்வர் பினராயி.?

Scroll Down To Discover

குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமான தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரளா தமிழகம் திருச்சூர் வர்மா கல்லூரி வளாகத்தில் பா.ஜ.க. மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக கருத்தரங்கம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு இடதுசாரி எஸ்.எஃப்.ஐ. மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி வளாகத்திற்குள் கருத்தரங்கை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

https://youtu.be/NCGxVyinLwU

இதையடுத்து கல்லூரி வளாகத்துக்கு வெளியே சாலையோரத்தில் கருத்தரங்கை நடத்த நடவடிக்கை மேற்கொண்ட போது மோதல் வெடித்தது. ஏபிவிபி மாணவர் ஒருவரை கும்பலாக சேர்ந்து எஸ்.எஃப்.ஐ மாணவர் அமைப்பினர் விரட்டி விரட்டி தாக்கினர்.இந்த தாக்குதலில் ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்த ஒருவரும் தாக்குதலை தடுக்க முயன்ற இரண்டு பேரும் காயம் அடைந்தனர். மேலும் மாணவிகள் இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியவர்கள் இப்போது ஒரு மாணவரை கம்யூனிஸ்ட் அமைப்பின் உள்ள SFI மாணவர்கள் கும்பலாக தாக்கி உள்ளார்கள். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என பல கூறிக் வருகிறார்கள்..!