டெல்லியில் நடந்த கொடூரம் – சம்பளம் கேட்ட பெண் ஊழியரை வீட்டிற்கு வரச்சொல்லி நாயை விட்டு கடிக்க விட்ட உரிமையாளர்..!

சமூக நலன்

டெல்லியில் நடந்த கொடூரம் – சம்பளம் கேட்ட பெண் ஊழியரை வீட்டிற்கு வரச்சொல்லி நாயை விட்டு கடிக்க விட்ட உரிமையாளர்..!

டெல்லியில் நடந்த கொடூரம் – சம்பளம் கேட்ட பெண் ஊழியரை  வீட்டிற்கு வரச்சொல்லி நாயை விட்டு  கடிக்க  விட்ட உரிமையாளர்..!

டெல்லியின் கிர்கி எக்ஸ்டென்சன் பகுதியில் ஆயுர்வேத ஸ்பா சென்டர் நடத்தி வருபவர் நிகிதா. இங்கு வேலை செய்த சப்னா என்பவர், ஜனவரி முதல் ஊரடங்கு தொடங்குவதற்கு முன் வேலை செய்ததற்கான ஊதியத்தை கேட்டுள்ளார். ஆனால், நிகிதா மறுக்கவே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நிகிதா தனது வளர்ப்பு நாயை விட்டு சப்னாவை கடிக்க வைத்துள்ளார். இதனால் சப்னாவின் முகத்தில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 2 பற்களும் உடைந்துள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சப்னா, ஜுன் 11-ல் டெல்லி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை ஒன்றரை மாதமாக அந்த அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த நான், மார்ச்.22ம் தேதி பணியிலிருந்து விலகினேன். இதையடுத்து நான் எனது பாக்கி சம்பளத்தை ஜூன் 11ம் தேதி கேட்டபோது, அழகு நிலைய உரிமையாளர் அவரது இல்லத்திற்கு வரும்படி கூறினார். இதைத்தொடர்ந்து, அவரும் கிர்கி பகுதியில் உள்ள உரிமையாளர் வீட்டிற்கு அந்த பெண் சென்றுள்ளார். அப்போது அவர், தொடர்ந்து, பணியை தொடருமாறு வலியுறுத்தியுள்ளார் அப்போது தான் சம்பளத்தை தர முடியும் என்று கூறியுள்ளார். எனினும், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த பெண்ணை மிரட்டிய உரிமையாளர் தனது நாயை விட்டு அந்த பெண்ணை கடிக்க விட்டுள்ளார் என கூறியுள்ளார்.

ஆனால், இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நிகிதா தலைமறைவாகிவிட்டார். சில தன்னார்வ அமைப்புகள் தலையிட்டதால் அழுத்தம் அதிகரித்ததை அடுத்து, 20 நாட்கள் கழித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த நிலையில், நிகிதா நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave your comments here...