கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் – சித்தா மருத்துவர் வீரபாபுவை பாராட்டிய ரஜினி..!

சமூக நலன்தமிழகம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் – சித்தா மருத்துவர் வீரபாபுவை பாராட்டிய ரஜினி..!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் – சித்தா மருத்துவர்  வீரபாபுவை பாராட்டிய ரஜினி..!

தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அலோபதியுடன், சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருந்துவ சிகிச்சை அளிக்க, தமிழக அரசு பரிந்துரைத்தது.

சித்த மருத்துவர் வீரபாபுவுக்கு சில அனுமதி தந்துள்ளது எடப்பாடி அரசு. அதன்படி சென்னையில், சில பகுதிகளில் சித்த மருத்துவச் சிகிச்சை முகாம் அமைத்து, கொரோனா பாதிப்புள்ள பலருக்கும் சிகிச்சை அளித்து வருகிறார். குறிப்பாக, பல்வேறு மூலிகளைப் பயன்படுத்தி சித்த மருத்துவச் சிகிச்சை கொடுக்கிறார் வீரபாபு.

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, ஜவஹர் இன்ஜினியரிங் கல்லூரியில், கொரோனா நோயாளிகளுக்கு, தனித்த சித்தா சிகிச்சை அளிக்க, மாநகராட்சி சிறப்பு மையத்தையும் அமைத்துள்ளது. இங்கு, டாக்டர் வீரபாபு குழுவினர், ஆவி பிடித்தல், சூரிய குளியல், மூலிகை தேநீர், சித்தா உணவுகளை வழங்கி, சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த முகாமில், சிகிச்சை முடிந்து, இதுவரை, 550 பேர், நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்; 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை அறிந்த நடிகர் ரஜினி, வீரபாபுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, ” உங்களைப் பற்றியும் உங்களின் சித்த மருத்துவச் சிகிச்சை பற்றியும் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். மக்களுக்குச் சிறப்பான சேவை செய்து வருகிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள் ” எனப் பேசியுள்ளார் ரஜினி.

Leave your comments here...