நாட்டிற்காக எதிரான கருத்துகள் : சிறார்களுக்கு மரண தண்டனை ரத்து- சவுதி மன்னர் சல்மான் அறிவிப்பு..!

உலகம்

நாட்டிற்காக எதிரான கருத்துகள் : சிறார்களுக்கு மரண தண்டனை ரத்து- சவுதி மன்னர் சல்மான் அறிவிப்பு..!

நாட்டிற்காக எதிரான கருத்துகள் : சிறார்களுக்கு மரண தண்டனை ரத்து- சவுதி மன்னர் சல்மான் அறிவிப்பு..!

சவுதிஅரேபியாவில் மைனர்கள்(18வயதுக்கு கீழ்உள்ளோர்) செய்யும் குற்றச்செயல்களுக்கு வழங்கப்பட்டு வந்த மரண தண்டனையை ஒழிக்க மன்னர் சல்மான் உத்தரவி்ட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மரண தண்டனைக்குப் பதிலாக 18வயதுக்குட்பட்டோர் ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டால் அவருக்கு அபராதம், சிறை, சமூகசேவை ஆகியவற்றை வழங்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.

சவுதி அரேபியாவில், மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில், சவுதி அரசர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே, சவுதி அரேபியாவில் கள்ள உறவு வைத்திருப்பவர்கள், திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்கு கசையடி உள்ளிட்டவை தண்டனையாக வழங்கப்படுவது வழக்கம். இந்த தண்டனைக்கு பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக கூறி சவுதி அரேபியாவை சேர்ந்த சமூக நல ஆர்வலர் ராய்ப் பதாவி என்பவருக்கு அந்நாட்டு அரசு 10 ஆண்டு சிறை தண்டனையும், 1000 கசையடிகளையும் கடந்த 2014ம் ஆண்டு வழங்கியது. இவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் சிறந்த மனித உரிமையாளர் விருதை பெற்றிருந்தார். சவுதி அரேபியா அரசின் தண்டனை முறைக்கு எதிராக போராடிய அரசியல் உரிமை கூட்டமைப்பு உறுப்பினரான அப்துல்லா அல் ஹமீது மரணம் அடைந்த சில நாட்களே ஆன நிலையில் கசையடி ஒழிப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச மனித உரிமை குழுவினர் இந்த தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சவுதி அரேபியா உச்ச நீதிமன்றம் கசையடி தண்டனையை ஒழித்து கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது. சர்வதேச மனித உரிமைவிதிகளுக்கு எதிரானதாக கசையடி தண்டனை இருப்பதால் அந்த தண்டனை ஒழிக்கப்படுகிறது. இனிமேல் குற்றவாளிகளுக்கு அபராதம் விதிப்பது, சிறை தண்டனை, அல்லது பொது சேவை செய்தல் போன்றவற்றையே தண்டனையாக நீதிபதிகள் வழங்கவேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சவுதியில் உள்ள சிறுபான்மை சமூகமான ஷிட்டே பிரிவைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 6 பேருக்கு குற்றச்செயல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது, இது அந்நாட்டைப்பொறுத்தவரை தீவிரவாத செயல்களுக்கு ஒப்பானதாகும்.ஆனால், இந்த 6 பேருக்கும் மன்னர் சல்மான் மன்னிப்பு வழங்கி மரண தண்டனையை ரத்து செய்துள்ளார். இவர்கள் 6 பேரும் ஏற்கெனவே 10 ஆண்டுகள் சிறையில் இருந்தததால் அவர்களை விடுவிக்கவும் உத்தரவி்ட்டுள்ளார். கடந்த ஆண்டு சில குற்றங்களுக்காக 16 வயது நிரம்பிய ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது. இதற்கு அம்னஸ்டி அமைப்பு கடுமையாக கண்டனம் தெரிவித்து, சிறார்களுக்கு எதிரான மரண தண்டனையை ஒழி்க்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. சவுதியின் இந்த அறிவிப்புக்கு மனித உரிமை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Leave your comments here...